பக்கங்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

மெல்லென ஒரு தூறல்

தடவையாவது பெய்தே தீரவேண்டும்
ஒரு கடுங்கோடையானாலும் சிறுதூறல்..,
நான் வைத்த செடியில்இன்னும் பூக்காத பூவின் கோரிக்கை..
வானவில்லே பார்த்தறியாதகுட்டிமகனின் ஏக்கம்...
செய்து வைத்த காகித கப்பலைஎன்ன செய்வதென்ற குழப்பம்...
மழைத்துளியை ஸ்பரிசித்திராதநேற்றுஜனித்த பூனைக்குட்டி...
இவர்களின் பிரதிநிதியாய்கேட்கிறேன்..
எனக்காக,
மெல்லென தூறல்போடுவானமே நீ ஒரு தடவை!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக