பக்கங்கள்

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

மங்கையரர்கரசியின் பின்னல்

மங்கையர்கரசியின் பின்னல்*
எங்கள் தெருவிற்கு
தனிக்குடித்தனம் வந்திருந்தாள் மங்கை அக்கா..ஆசிரியர் பணிக்காய் காத்திருந்தாள்..அம்மன்சிலையொத்த வடிவழகி..அசாத்திய தலைமுடி..நீளப்பின்னலை நாளெல்லாம் பார்க்கலாம்..இழையிழையாய் இழைத்துப்பின்னி... நெருக்கக்கட்டிய ஜாதிமல்லி சூடியிருப்பாள்..அது வாடி யாரும் பார்த்ததாய் வரலாறு கிடையாது..தெருப்பிள்ளைகள் அவளிடம் தலைபின்ன காத்திருக்கும்..வலிக்காமல் சிக்கெடுப்பாள்..ஆயினும் வலிக்கிறதா..வலிக்கிறதா இடையிடயே கேட்டுக் கொள்வாள்..எண்ணைகாணாமல்  என் தலை செம்பட்டை சேர்ந்தென கடிந்து கொள்வாள்..என் திருமணப்பின்னலும் அவள் கைவண்ணம் தான்..வளைகாப்பிற்காய் வீடு வந்த நான்..முதலில் தட்டியது அவள் வீட்டுக்கதவைத்தான்..பகலில் ஒருபோதும் அக்கா கதவை மூடி வைக்க மாட்டாளே..அக்காவைப்பார்த்தபோது.. என் குரல்வளையை கொழுத்தொரு நண்டின் பிடி அழுத்திக் கவ்வியது..அடிவயிற்றுப் பிள்ளை கூட அதிர்ந்து போனான்..அழுந்தச்சிரைக்கப்பட்ட தலை..குழிபட்ட விழிகள்..உலந்த பூச்சரமாய் போயிருந்தாள்.அறுவையும் தெரபிகளும் அவளை குலைத்துக் குதறியிருந்தது..அவளை விழிக்கவிடாமலே விருந்தாக்கிப் கொண்டது..அந்தக் கொடுமைக்கார நண்டு..இன்னும் என் கனவுகளில் மங்கை அக்கா எண்ணையும்சீப்பும் எடுத்து வருகிறாள்..கழுத்துவரை நான் சிகையை அறுத்தெரிந்த பின்னும் கூட..கடவுளை ஒருபோதும் நான் மன்னிப்பதாய் இல்லை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக