பக்கங்கள்

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

என்ன செய்ய?

எப்போதும் எதற்காகவேனும் அழும்
இரண்டு வயது குழந்தையாய் − என்மனது!
கிடைத்த சாமான்களையெல்லாம் உடைத்துவிட்டு,
கிடைக்காத ஒன்றுக்காய் கேவி அழுகிறது...
சாதாரண சமாதானமெல்லாம் எடுபடாது
சாதித்தே தீருவேன் நினைத்ததை என்ற அழுகை
இதுவேண்டாம், அதுபிடிக்கவில்லை
இப்போதேபரணில் உள்ள யானை பொம்மையைத்தா!
அழும்பிள்ளையை அதட்டலாம்... அடக்கலாம்..
முதுகில் இரண்டுவைத்து மூடுடாவாயை எனலாம்
தொட்டதெற்கெல்லாம் சிணுங்கி அழுது,
தொந்தரவு செய்யும் என்மனதை என்ன செய்ய?
எந்த பொம்மையைக் காட்டிஇந்த மனதை வசப்படுத்த?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக