பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

காதல் மொட்டு

மொட்டுகளிம் சென்று
முதல் வேலையாய்க் கேட்பேன்
எப்போது மலர்வீர்?
முதல் பனித்துளிதரை தொடும் போதா?
பட்டாம்பூச்சியின் முதல்ஸ்பரிசம் பட்டா?
கதிரவனின் ஒற்றைக்கதிர்உம் மீது படும் போதா?
தெற்கத்திக் காற்று தடவும்வினாடிப்பொழுதிலா?
எப்போதடி மலர்வீர்?சொல்லுங்களேன்...ம்ஹீம்..
.இன்று வரை சொல்லவேயில்லை...
அருகிருந்து கவனிக்கும்பொழுதுகளில்
மலர்ந்ததே இல்லை
கவனம் தவறும் விநாடிப்பொழுதில்
சில்லென்று சிரித்து...பூத்து விடுகிறது...
ஒவ்வொருமுறை மொட்டுகள் எனை ஏய்க்கும் போதும்....நினைவுவருகிறது...
மொட்டுகள் போலவே தந்திரம் மிக்க உன்காதலும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக