பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

நீயும் சுயம்புதான்

சுயம்புவாய் யான் மட்டும்...
நினைக்கும் போதே
மனதின் கர்வம்மண்டையில் அறைகிறது..
யாரிங்கு சுயம்பு...?
புதைந்து எழமண் மாதா...
எழுந்து நனைய மழை மாதா...
சுட்டு வடிக்கசூரியன் உதவி..
.உள்ளே திறக்ககாற்றுச் சாவி...
கூப்பி வணங்கமுடிவற்ற ஆகாயம்...
ஐவரும் எம்மைஅனுப்பி வந்த இடம்..
முளைத்தெழும் காலை
சுயம்புவென்றால்...சிரிக்கின்றன பூதங்கள்...
சிரிப்புக்கு பயந்துஉள்ளே ஒடுங்குகிறேன்...
அணைத்துச் சொல்கின்றன...
,உலகச் சுயம்பில் ஒரு துளி நீயென்றால்
நீயும் சுயம்புதான்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக