பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

எல்லாமும் இன்னும் இருக்கின்றன

நம் பள்ளிக்குச் வருகிறேன்
இன்று இருக்காது அவைகள் எல்லாம்
என்ற எண்ணத்துடனேயே

நாம் நின்று பேசியபுங்கை மரமும்...
இருவர் சைக்கிளும் உறவாடிய நிறுத்துமிடமும்,
பிள்ளையார் கோயில் கருங்கல் மேஜையும்,
என் பெயர் கீறியஉன் வரிசை பெஞ்சும்...
உன் மணியான எழுத்தில்தேதி,கிழமை தாங்கியகரும்பலகையும்....
பிள்ளைகளுடன்பள்ளி செல்லும் இந்நாள்...

சாக்பீஸ் துகளால் கேசம் வெள்ளையாக்கிச்
சிரிக்கும் என் பிள்ளையும்...
என்னைப்போலவே
நந்தியாவட்டைபறித்து எறிந்து விளையாடும்
உன் மகளும்....

நலம் விசாரித்து மலர்ந்து விரிந்த
நம் கண்கள்பிரதிபலிக்கின்றன...
உன் குடும்பத்தின் மீதானஎன் வாத்சல்யம்...
என் வாழ்வின் மீதான உன் அக்கறை...
இந்த கணம் நாம் விட்டுச் சென்றஎல்லாமும்
அப்படியேஇருப்பதாய் உணர்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக