பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

உலகக்கருத்துகளுக்கு உதைபந்தாய் நான்

காப்பாற்று...
தொலைந்து போகிறது...
சட்டென்று படியிறங்கிமழை நனைவதோ,
சோறு வைக்க காக்காவை கத்தி அழைப்பதோ...,
நீர் சொட்டும் கூந்தலுடன்
மொட்டைமாடி புத்தகங்களோ...,
அலட்சியமான சைக்கிள் சவாரியோ...,
இவற்றிற்கான சாத்தியங்கள் மெல்லக்குறைய...
உலகின் கருத்துகளுக்கு
உதை பந்தாய் நான்...
கவிதையே காப்பாற்று...
என் குழந்தைமை
மெல்ல கூக்குரலிட்டுஅழுது மடிவது...
உன் காதில் கேட்கிறதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக