பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

ஆதலினால் காதல் செய்வீர் குயில்களே

மலர் தாங்கிமோனத்தில் இருக்கும்
வேப்பமர எதிரெதிர்க்கிளைகளில் குயில்கள் இரண்டு
...கூகூ... இது ஆண்குயில்
குக்கூ...பெண்குயிலோ
சடசடத்து அருகில் அமர்ந்து
இறகு கோதி காதல் செய்யதடை ஏதுமில்லை...
ஆனாலும் கிளைத்தூரம் விட்டு
மொழி பேசி கனிந்து வழியும் காதல்...
கூடிக் கலக்கும் தருணத்தை விட
கூவி பேசும் தருணம்...சொட்டி வழியும் காதல்...
மரமெங்கும் நிறைந்து படர்ந்து....
என்னிலும் அலையலையாய்
எதையோ எழுப்பும்...குயில்களே...
ஆதலினால் காதல் செய்வீர்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக