பக்கங்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

நீ தூங்கிவிடாதே

கிழிந்திருந்த பாயின்கோரையை கைகள் திருக,
உன் இடுப்பில் என் கொலுசுக்கால்கள்...
குசுகுசுவென எனக்குமட்டும்கேட்கும் மொழி பேசும் உன் உதடுகள்...
ஆச்சர்யம் விரித்துப் போகும்விழிகள் இருட்டிலும் பளபளக்கும்...
எந்த வினாடி தூக்கக்கிணற்றுக்குள்தவறி விழுந்தேன்
என்றஞாபகம் இருக்காது...
விடியலில்...கதையின் மீதிகேட்டால் செல்லமாய் அதட்டுவாய்...
எனக்கான உலகத்தை சிருஷ்டித்துஒரு கதை சொல்லேன்...
உன் மூக்குப்பொடி வாசத்துடன்
முந்தானை பிடித்து நிம்மதியாய்...தூங்க விரும்புகிறேன்...
நான் வருவதற்குள்நீ தூங்கி விடாதே....என் செல்லப்பாட்டியே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக