பக்கங்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

தெரிந்திருக்கப்போவதில்லை

வாய் பிளந்து இரைக்காகக்காத்திருக்கும்
குருவிக்குஞ்சுகளுக்கோ,
தளை அறுத்து தாய்மடிமுட்டும்
செவலைக்கன்றுக்கோ,
மோவாயில் பால்தடத்தோடுகிறங்கிக்கிடக்கும்
மூன்றுமாதக்குழந்தைக்கோ,
தெரிந்திருக்கப்போவதில்லை...,
இன்னும் ஐந்துநிமிடத்தில்
அங்கே கண்ணிவெடியொன்று வெடிக்குமென்று....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக