பக்கங்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

என் கவிதையே

போகிறாய்..அவ்வப்போது...
சொல்லிக் கொள்ளாமலே...
நானும் தேட முயற்சிப்பதே இல்லை...
பிரபஞ்சப் பெருவெளியில்உன்னைத் தொலைந்து போகவிடுகிறேன்...
மிகச் சரியாய் வந்து விடுவாய்...
உன் மடியில் முகம் புதைத்து
நான் அழக் காத்திருக்கும் தருணங்களில்...
நான் ஆசுவாசம் அடைந்ததும்என் அமர்களம் தாங்காமல்மீண்டும்தொலைவாய்..
என் கவலைக்காலங்களை
எப்படி சரியாக கண்டுகொள்கிறாய்
கண்ணீர் கரிக்கும் கவிதையே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக