பக்கங்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

ஞானம்

ஞானம் கிடைத்தபோது
நான் நான்கே மாத குழந்தைதானாம்...
பசித்தால் கூடபதறி அழ மாட்டேனாம்...
பால் ஆற்றும் சத்தத்திற்கேற்ப
கால் உதைத்து களித்திருப்பேனாம்...
தாத்தா சைக்கிள் கிறீச்சிடுவதைசரியாய் கண்டுபிடிப்பேனாம்...
தொட்டி நிழலாடுவதை பார்த்தால்கை கொட்டிச் சிரிப்பேனாம்...நான்...ஞானக்குழந்தையாம்...
சொல்லும் போதே...,
பொக்கைவாய் முழுக்கபெருமை பொதிந்து போயிருக்கும்...
பாட்டி காலத்திய "ஞானம்"எத்துணை எளிமையானது பாருங்களேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக