பக்கங்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

பாட்டி உனக்காக

உனக்காக இடிக்கும் வெற்றிலையில்
எனக்காக எப்போதும் ஒரு பங்கு...
ஒவ்வொருமுறையும் மழைநனைந்த
என்னைத் துவட்டும் சேலைமுந்தானை...
குளிக்குமுன்னே காத்திருக்கும்
மைகோதியும்மணக்கும் சாம்பிராணி புகையும்...
மணிப்பொழுதாயினும அசையமாட்டாய்..
மடிதூங்கும் நான் அசங்கக்கூடாதாம்...
பாட்டி,உன் மேல் எனக்குக் கோபம்...!!!
பொக்கைவாயும்,புரையோடியகண்ணும்
போட்டி போட்டு அன்பைப்பேச...
உன் அன்பைப்பற்றி எழுதும் எல்லாமும்
தோற்றே போய்விடுகிறது போ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக