பக்கங்கள்

வியாழன், 14 ஜனவரி, 2010

காத்திருக்கிறது மலை

வருமா மீண்டும் ஒருமுறை
அந்தப் பொழுதுகள்,
நீண்டு நெளிந்திருந்த மலைப்பாதை வளைவில்,
பனிகொட்டும் பகல்வேளையில் கைகோர்த்து திரிந்த காலம்,
பைன் மரக்கூம்புகளையும் வாடா மஞ்சள் மலர்களையும்
தேவையே இல்லாமல் சேகரித்தோம்...
குளிர்காற்றில் வெறும் வாயால்பனி புகைத்தோம்...
தேயிலைச் சரிவுகளில்கால் கொள்ளாமல் ஓடித் திரிந்தோம்...
இப்போதும் பைன் மரம்கூம்புதிர்க்கிறது...
மஞ்சள் வாடா மல்லியும் மலர்கிறது...
தேயிலையும் துளிர்க்கிறது...
நீயும் நானும் மட்டும்மாறிப்போனோம்..
நீ உன் கணிணியுடனும்
நான் பிள்ளைகளுடனும்..
ஏக்கத்துடன் காத்திருக்கிறது
மலை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக