பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

மன மறைவுப் பகுதிகள்

எனக்காக இதைத் செய்வாயா?
எனக்கான பாதைகளை நெறிப்படுத்தி இருந்தாய்...
இருபுறமும் செழித்தபுற்களுடன்,
சலசலக்கும் நீரோடை
வெயில் துளைக்கா ஒற்றையடிப்பாதை
அருமையான சூழல் என்று
அறிமுகப்படுத்தியே வைத்திருந்தாய்...
என் மனமோ நெடிதுயர்ந்த
மலைக்குப் பின்நீட்டி நிற்கும்
பாறைசரிவின்மறைவுப் பகுதியிலே
நாட்டம் கொண்டிருந்தது....
ஒவ்வொரு முறையும்...
பசும்புல் தந்து
வயிறு நிறைக்கும் எனதருமை ஆயனே...
ஒரு முறையேனும் என்னைத் தவறவிட்டுவிடு...
என் மனதின் மறைவுப் பகுதிகளை
நிரப்பிக் கொள்ள...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக