பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

எட்டிப்போ எச்சரிக்கிறேன்

எப்போதும்
உயர உயரப் பறக்க ஆசை
மகிழ்ச்சியும்,அன்பும்நிறைவும், அமைதியும்
ஊதிக் கட்டிய பலூனாய்...
இலக்கின்றி பறக்கின்றேன்...
இன்னும் மேலே...மேலே...
வாழ்க்கைக் காற்றும்
எனக்குச் சாதகமாய்...
சந்தோச அலையலோடு
இலக்கு நோக்கி பயணம்...
அகந்தைப் பறவை,
போகிற போக்கில்கூரிய அலகால்...
குத்தித் துளைக்க நானா கிடைத்தேன்...???
உனக்கான ஆள் நானில்லை
எட்டிப்போ எச்சரிக்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக