பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

சத்தம் போடக்கூடாது

சத்தம் போடக் கூடாது...
கவிதைக் குழந்தை பிரசவிக்கும் நேரமிது...
அழுதபடி பிறக்குமா?
சிரித்தபடி பிறக்குமா?
கைகளைப் பிசைந்தபடி...காத்திருக்கிறேன்...நான்...
தாயும் தந்தையுமாய்
இரட்டைச் சுமை என்மீது...
நானே சுகித்து நானே சுமந்து...
பிள்ளை பெற்றுதெருவில் இறக்கி விடுகிறேன்...
அள்ளி அணைத்து
கன்னம் தடவிக்கொஞ்சி கையிலேந்தி..
மெல்ல மெல்ல
சீராட்டி வளர்க்கிறது உலகம்
பிள்ளையுடன்...தாயையும் சேர்த்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக