பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

பட்டாம்பூச்சி

என்னவள் உன்னால்மட்டுமே முடியும்...
உன் சிரிப்பினைபட்டாம்பூச்சிகளாக்கி
நகரெங்கும் பறக்கவிட,
உனக்கு பிடித்தவரின்
தோளில் மட்டும் அமரும் அனுமதியுடன்...
எனக்கான பட்டாம்பூச்சி
என்மேல் அமரும் போது
நானும் இறக்கை முளைத்து
பறக்கத் தொடங்குவேனாயிருக்கும்...!!
என் வாழ்க்கையும்
வண்ணம் பூசிக்கொள்ளுமாயிருக்கும்!!!
நினைவு இனிக்கும் அதே நேரம்
காத்திருத்தல் கசந்து வழிகிறது...
சீக்கிரம் வரச்சொல்லேன்
பட்டாம் பூச்சியை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக