பக்கங்கள்

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

பரண் பொழுதுகள்

பரண்களில் தேடிய பொழுதுகள்
வீணாய்ப் போனதேயில்லை...

ஒட்டடைப் பூச்சூடிய
கால் உடைந்த மரப்பாச்சியோ...
இன்னும் அழியாத ஆவண்ணாவுடன்
முதல் வகுப்பு சிலேட்டோ
இறந்து போன தாத்தாவின்
முனை மழுங்கிய கைத்தடியோ...
தங்கையுமாய் நானுமாய்
சண்டையில்சேதப்படுத்திய பிரம்புக் கூடையோ....

எதைத் தேடி பரண்நாடினேனோ
அது கிடைக்கவில்லையெனினும்
இதுவரை தொலைத்ததெல்லாமும் கண்முன்னே!
பரண் விட்டிறங்கும் பொழுதுகள்
சுகமானவை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக