தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

ஞானம்

ஞானம் கிடைத்தபோது
நான் நான்கே மாத குழந்தைதானாம்...
பசித்தால் கூடபதறி அழ மாட்டேனாம்...
பால் ஆற்றும் சத்தத்திற்கேற்ப
கால் உதைத்து களித்திருப்பேனாம்...
தாத்தா சைக்கிள் கிறீச்சிடுவதைசரியாய் கண்டுபிடிப்பேனாம்...
தொட்டி நிழலாடுவதை பார்த்தால்கை கொட்டிச் சிரிப்பேனாம்...நான்...ஞானக்குழந்தையாம்...
சொல்லும் போதே...,
பொக்கைவாய் முழுக்கபெருமை பொதிந்து போயிருக்கும்...
பாட்டி காலத்திய "ஞானம்"எத்துணை எளிமையானது பாருங்களேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக