தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

செவ்வாய், 30 அக்டோபர், 2018


நல்லநடனம் ஒன்று எப்படி இருக்குமென்று..சொல்லித்தந்தது..ஊதுவத்திப் புகை..யாதொரு தடையுமில்லை, யாதொரு தளையுமில்லை,' தன்னையே கரைப்பதில் கிஞ்சித்தும் கவலை இல்லை..காற்றின் மாயக்கரங்களைக் காதலுடன் பற்றியபடி, பிரபஞ்ச இசைக்கு காதுகொடுத்து ஆடுகிறது அழகாய்...வளைந்தும், சுழன்றும்..நடனம் முடிய முடிய நடனமாய் அது ஆகிப்போனது..ஆடியவர் இங்கில்லை..ஆட்டமும் புலனில்லை..திரிபுரம் எரித்த சிவனின் நடனம் கண்டேனில்லை..என்னால் எரிபட்ட ஊதுபத்தியின் நடனம்  அதனினும் குறைவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக