போராட்டங்கள்...
சாமான்யப்பட்டதல்ல...
புழுதியில் கோலியாடும்சிறுவருடன்
குதித்தோடதுடிக்கும்...
பாடல் கேட்டவுடன்
பரபரத்து ஜதிபோடும்...மழைநேரபின்னிரவில்
தெளிந்த சேற்றில் கல்லெறியும்...
நாற்புறம் திறந்த மொட்டைமாடியில்
போர்வையின்றி உறங்கிப்போகும்...
அக்கம்பக்கம் என்ன சொல்லும்
என்று அடக்கி வைக்கிறேன் அவ்வப்போது...
இரும்புக்கதவுக்கும் என்மனதுக்குமான
போராட்டம் சாமான்யப்பட்டதல்ல....
கதவு விளிம்பில் மனம் நசுக்கி
இருகை தூக்கி
தோற்றுத்தான் போகிறேன்எப்போதும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக