தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

ஒரு நொடியாவது???

பேப்பருடன் அமர்ந்தால் மணி ஏழு
டைனிங் டேபிள் முன் என்றால் எட்டு
ஷூவுக்குள் நுழைந்தால் மணிஒன்பது...
டீ குடித்துக் கொண்டிப்பாய் பத்து மணிக்கு...
தயிர் சாதம் புளித்திருக்கக் கூடாது ஒரு மணிக்கு...
வேலை அதிகமாய் இருக்குமோ மூன்று மணி...
பைக் ஹார்ன் கேக்கும் இப்போது ஐந்து மணி...
என் நாள் முழுவதும் ஓடுகிறாய் நீ, நிமிடங்களாய்....
உன் நாட்பொழுதின் நினைவில்...நான் நின்றேனா...
ஒருநொடியாவது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக