தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

குருவிகளுடன்....

கண்கள் குளிர்ந்தன...
கண்ணாடியூடே தெரிந்தபரந்து விரிந்த இளமஞ்சள் வானம்,
பச்சைச்செடியில் தீக்கங்குகளாய்அடர்சிவப்புசெம்பருத்திப்பூக்கள்.....
செம்பருத்தியைக் கொத்தியவாறு சிட்டுக் குருவிக் கூட்டம் ஒன்று...
ஏதோ வாகனம் எழுப்பிய இரைச்சலில்
எழும்பிப் பறந்தன
அச்சமுற்றசிட்டுக்குருவிகள்
வேலியின்றும் வேகமாய்...

கவிதை எழுத சரியான தருணம்சொன்னது மனம்...
பேப்பரும் பேனாவும் எடுத்த நிமிடம்
கவிதைக்குச் சிக்காமல்தப்பிப் பறந்திருந்தன குருவிகள்...
எல்லாவற்றையும் வளைத்துப் பிடித்து
வார்த்தையில் அடைத்தல் சாத்தியமா?
எழுதுவதை நிறுத்தி விட்டு

குருவிகளுடன் பறக்கலானது மனது...
குருவிகள் பறக்கட்டும்
கவிதையில் சிறைப்பட வேண்டாம்...
குருவியின் பின்னால் மிதந்து செல்லும் மனதே...
நீயும் தப்ப முயற்சி செய்...என் கவிதையிடமிருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக