பொழுது போகாமல் நான் இருந்த நேரம்
நீ என் அருகில் வந்தாய்...
எப்போதும் போலகண்ணாமூச்சி விளையாட அழைத்தாய்...
என் கண்ணைக் கட்டி விட்டு
குறுக்கும் நெடுக்குமாய் ஓட ஆரம்பித்தாய்...
என்னைப் பிடி என்று சொல்லி விட்டுமுன்னேற ஆரம்பித்தாய்
திடிரென உணர்ந்த அமைதியால்
திடுக்கிட்டு கட்டை அவிழ்த்தேன்.
திசை தெரியா இருட்டில்வழி தெரியா இடத்தில்
என்னை தனியாய் விட்டு விட்டு
மாயமாய் மறைந்திருந்தாய்...
அங்கிருந்து ,மீண்டு வருவதற்குள்
மாண்டு விடக் கூடும் என்றே பயந்தேன்...
தட்டுத்தடுமாறி தப்பித்து வந்து விட்டேன்...
எனக்குத் தெரியும்மீண்டும் நீ வருவாய்...
விளையாட அழைப்பாய்...
விடை தெரியாத கேள்வியே...அடுத்தது என் முறை...
உன் கண்ணைக் கட்ட
கருப்புத் துணி தேடிக்கொண்டிருக்கிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக