தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

விடை தெரியாக் கேள்வியே

பொழுது போகாமல் நான் இருந்த நேரம்
நீ என் அருகில் வந்தாய்...
எப்போதும் போலகண்ணாமூச்சி விளையாட அழைத்தாய்...
என் கண்ணைக் கட்டி விட்டு
குறுக்கும் நெடுக்குமாய் ஓட ஆரம்பித்தாய்...
என்னைப் பிடி என்று சொல்லி விட்டுமுன்னேற ஆரம்பித்தாய்
திடிரென உணர்ந்த அமைதியால்
திடுக்கிட்டு கட்டை அவிழ்த்தேன்.
திசை தெரியா இருட்டில்வழி தெரியா இடத்தில்
என்னை தனியாய் விட்டு விட்டு
மாயமாய் மறைந்திருந்தாய்...
அங்கிருந்து ,மீண்டு வருவதற்குள்
மாண்டு விடக் கூடும் என்றே பயந்தேன்...
தட்டுத்தடுமாறி தப்பித்து வந்து விட்டேன்...
எனக்குத் தெரியும்மீண்டும் நீ வருவாய்...
விளையாட அழைப்பாய்...
விடை தெரியாத கேள்வியே...அடுத்தது என் முறை...
உன் கண்ணைக் கட்ட
கருப்புத் துணி தேடிக்கொண்டிருக்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக