தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

மெல்லென ஒரு தூறல்

தடவையாவது பெய்தே தீரவேண்டும்
ஒரு கடுங்கோடையானாலும் சிறுதூறல்..,
நான் வைத்த செடியில்இன்னும் பூக்காத பூவின் கோரிக்கை..
வானவில்லே பார்த்தறியாதகுட்டிமகனின் ஏக்கம்...
செய்து வைத்த காகித கப்பலைஎன்ன செய்வதென்ற குழப்பம்...
மழைத்துளியை ஸ்பரிசித்திராதநேற்றுஜனித்த பூனைக்குட்டி...
இவர்களின் பிரதிநிதியாய்கேட்கிறேன்..
எனக்காக,
மெல்லென தூறல்போடுவானமே நீ ஒரு தடவை!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக