தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

என் கவிதையே

போகிறாய்..அவ்வப்போது...
சொல்லிக் கொள்ளாமலே...
நானும் தேட முயற்சிப்பதே இல்லை...
பிரபஞ்சப் பெருவெளியில்உன்னைத் தொலைந்து போகவிடுகிறேன்...
மிகச் சரியாய் வந்து விடுவாய்...
உன் மடியில் முகம் புதைத்து
நான் அழக் காத்திருக்கும் தருணங்களில்...
நான் ஆசுவாசம் அடைந்ததும்என் அமர்களம் தாங்காமல்மீண்டும்தொலைவாய்..
என் கவலைக்காலங்களை
எப்படி சரியாக கண்டுகொள்கிறாய்
கண்ணீர் கரிக்கும் கவிதையே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக