தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

இன்னும்?

உன் குழந்தைக்கு நீசோறூட்டுகிறாய்...
என் மகனுக்கு பந்து பொறுக்குகிறேன் நான்...
உன் வீட்டிலும்
என் தெருவிலும்
ஒரே நேரத்தில் ஒலிக்கிறது...
நீயும் நானும் சிலவருடம்முன்சேர்ந்து ரசித்த பாடலை...
கையெடுத்த கவளமும்...எறிய எடுத்த பந்தும்...
தாமதிக்கும் கணத்தின் கனம்..
இன்னும் நம் காதல்,
எங்கோ இந்த பிரபஞ்சத்தில்இருப்பதை
சொல்லாமல் சொல்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக