தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

நீ தூங்கிவிடாதே

கிழிந்திருந்த பாயின்கோரையை கைகள் திருக,
உன் இடுப்பில் என் கொலுசுக்கால்கள்...
குசுகுசுவென எனக்குமட்டும்கேட்கும் மொழி பேசும் உன் உதடுகள்...
ஆச்சர்யம் விரித்துப் போகும்விழிகள் இருட்டிலும் பளபளக்கும்...
எந்த வினாடி தூக்கக்கிணற்றுக்குள்தவறி விழுந்தேன்
என்றஞாபகம் இருக்காது...
விடியலில்...கதையின் மீதிகேட்டால் செல்லமாய் அதட்டுவாய்...
எனக்கான உலகத்தை சிருஷ்டித்துஒரு கதை சொல்லேன்...
உன் மூக்குப்பொடி வாசத்துடன்
முந்தானை பிடித்து நிம்மதியாய்...தூங்க விரும்புகிறேன்...
நான் வருவதற்குள்நீ தூங்கி விடாதே....என் செல்லப்பாட்டியே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக