தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

தெரிந்திருக்கப்போவதில்லை

வாய் பிளந்து இரைக்காகக்காத்திருக்கும்
குருவிக்குஞ்சுகளுக்கோ,
தளை அறுத்து தாய்மடிமுட்டும்
செவலைக்கன்றுக்கோ,
மோவாயில் பால்தடத்தோடுகிறங்கிக்கிடக்கும்
மூன்றுமாதக்குழந்தைக்கோ,
தெரிந்திருக்கப்போவதில்லை...,
இன்னும் ஐந்துநிமிடத்தில்
அங்கே கண்ணிவெடியொன்று வெடிக்குமென்று....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக