தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

பாட்டி உனக்காக

உனக்காக இடிக்கும் வெற்றிலையில்
எனக்காக எப்போதும் ஒரு பங்கு...
ஒவ்வொருமுறையும் மழைநனைந்த
என்னைத் துவட்டும் சேலைமுந்தானை...
குளிக்குமுன்னே காத்திருக்கும்
மைகோதியும்மணக்கும் சாம்பிராணி புகையும்...
மணிப்பொழுதாயினும அசையமாட்டாய்..
மடிதூங்கும் நான் அசங்கக்கூடாதாம்...
பாட்டி,உன் மேல் எனக்குக் கோபம்...!!!
பொக்கைவாயும்,புரையோடியகண்ணும்
போட்டி போட்டு அன்பைப்பேச...
உன் அன்பைப்பற்றி எழுதும் எல்லாமும்
தோற்றே போய்விடுகிறது போ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக