தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

கனாக்காலம்

எக்காலம் இது...?
மேகமும் சூரியனும்ஓளிந்து விளையாடும்
பகல்பத்து மணிப்பொழுது!
வானொலியில் ஓயாது
வாயடிக்கும் பெண்குரல்...
கழனிப்பானையில் தலைவிட்டுக் கவிழ்க்கும்
பக்கத்துவீட்டுப் பசு...
சமையலுக்காக ஆயப்பட்ட
கீரைமிச்சங்கள் சிதறிய முற்றம்...
அவசரம் ஒன்றும் இல்லை
ஆற அமர பேச நிறைய இருக்கிறதுஎதிர்வீட்டுப் பாட்டியுடன்...
இது என்ன காலம்?
அள்ளிப்போட்டுக் கொண்டு
அலுவலகம் செல்லும் பெண்களின் கனாக்காலம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக