தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

வியாழன், 14 ஜனவரி, 2010

ஒரு பிடிச் சிரிப்பு

மூடிய கையில் சிறைப்படுத்தி வைத்திருக்கிறேன்...
என் மகனின் ஒருபிடிச் சிரிப்பு...
அவ்வப்போது திறந்து பார்த்து,
அது தப்பித்து போகுமுன்படக்கென்று மூடிவிடுவேன்...
அவனைப் போல குறும்பு,அவன் சிரிப்பும்...
ஒரு இடத்தில்அடைத்து வைத்தல் கடினம்...
இன்று வேலை முடியும் வரை..,
கைக்குள் சிரி மகனே...
வீடு வந்ததும்...
கை கொள்ளாச் சிரிப்பைஅள்ளிப் பூசிக் கொள்கிறேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக