தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

வியாழன், 14 ஜனவரி, 2010

காத்திருக்கிறது மலை

வருமா மீண்டும் ஒருமுறை
அந்தப் பொழுதுகள்,
நீண்டு நெளிந்திருந்த மலைப்பாதை வளைவில்,
பனிகொட்டும் பகல்வேளையில் கைகோர்த்து திரிந்த காலம்,
பைன் மரக்கூம்புகளையும் வாடா மஞ்சள் மலர்களையும்
தேவையே இல்லாமல் சேகரித்தோம்...
குளிர்காற்றில் வெறும் வாயால்பனி புகைத்தோம்...
தேயிலைச் சரிவுகளில்கால் கொள்ளாமல் ஓடித் திரிந்தோம்...
இப்போதும் பைன் மரம்கூம்புதிர்க்கிறது...
மஞ்சள் வாடா மல்லியும் மலர்கிறது...
தேயிலையும் துளிர்க்கிறது...
நீயும் நானும் மட்டும்மாறிப்போனோம்..
நீ உன் கணிணியுடனும்
நான் பிள்ளைகளுடனும்..
ஏக்கத்துடன் காத்திருக்கிறது
மலை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக