தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

காதல் மொட்டு

மொட்டுகளிம் சென்று
முதல் வேலையாய்க் கேட்பேன்
எப்போது மலர்வீர்?
முதல் பனித்துளிதரை தொடும் போதா?
பட்டாம்பூச்சியின் முதல்ஸ்பரிசம் பட்டா?
கதிரவனின் ஒற்றைக்கதிர்உம் மீது படும் போதா?
தெற்கத்திக் காற்று தடவும்வினாடிப்பொழுதிலா?
எப்போதடி மலர்வீர்?சொல்லுங்களேன்...ம்ஹீம்..
.இன்று வரை சொல்லவேயில்லை...
அருகிருந்து கவனிக்கும்பொழுதுகளில்
மலர்ந்ததே இல்லை
கவனம் தவறும் விநாடிப்பொழுதில்
சில்லென்று சிரித்து...பூத்து விடுகிறது...
ஒவ்வொருமுறை மொட்டுகள் எனை ஏய்க்கும் போதும்....நினைவுவருகிறது...
மொட்டுகள் போலவே தந்திரம் மிக்க உன்காதலும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக