தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

மன மறைவுப் பகுதிகள்

எனக்காக இதைத் செய்வாயா?
எனக்கான பாதைகளை நெறிப்படுத்தி இருந்தாய்...
இருபுறமும் செழித்தபுற்களுடன்,
சலசலக்கும் நீரோடை
வெயில் துளைக்கா ஒற்றையடிப்பாதை
அருமையான சூழல் என்று
அறிமுகப்படுத்தியே வைத்திருந்தாய்...
என் மனமோ நெடிதுயர்ந்த
மலைக்குப் பின்நீட்டி நிற்கும்
பாறைசரிவின்மறைவுப் பகுதியிலே
நாட்டம் கொண்டிருந்தது....
ஒவ்வொரு முறையும்...
பசும்புல் தந்து
வயிறு நிறைக்கும் எனதருமை ஆயனே...
ஒரு முறையேனும் என்னைத் தவறவிட்டுவிடு...
என் மனதின் மறைவுப் பகுதிகளை
நிரப்பிக் கொள்ள...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக