தொடர் வண்டியின் உள்ளே
தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள்.
அலுத்துக்கொண்ட அவள் அம்மா
வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்...
மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்..
இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..??
நான் சொன்னேன்..
மலர்கள்.. இல்லை என்றாள்.
ஆடைகள் ...ம்ஹூம் என்றாள்
புத்தகங்கள்... மறுத்தாள்.
பெட்டியின் பக்கத்திலே
சாவியை வரைந்தாள்..
இப்போது கண்ணை மூடிய வண்ணம்
அதை திறக்க வேண்டுமாம்..
.என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம்.
.கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய்
இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்
கைகளில் கிட்டிய போதே உதிர்ந்தது இதழிதழாய்... எனக்கென நீ பறித்து நான் பாடம் செய்த செம்பருத்தி... அன்று பறிக்கும் போது..., கல் தடுக்கி உன் நகக்கண் பெயர்ந்தது... இன்றுஇதழ் உதிரும் நேரம் நீ தடுக்கி...நான் பெயர்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக