தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

சத்தம் போடக்கூடாது

சத்தம் போடக் கூடாது...
கவிதைக் குழந்தை பிரசவிக்கும் நேரமிது...
அழுதபடி பிறக்குமா?
சிரித்தபடி பிறக்குமா?
கைகளைப் பிசைந்தபடி...காத்திருக்கிறேன்...நான்...
தாயும் தந்தையுமாய்
இரட்டைச் சுமை என்மீது...
நானே சுகித்து நானே சுமந்து...
பிள்ளை பெற்றுதெருவில் இறக்கி விடுகிறேன்...
அள்ளி அணைத்து
கன்னம் தடவிக்கொஞ்சி கையிலேந்தி..
மெல்ல மெல்ல
சீராட்டி வளர்க்கிறது உலகம்
பிள்ளையுடன்...தாயையும் சேர்த்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக