தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

எல்லாமும் இன்னும் இருக்கின்றன

நம் பள்ளிக்குச் வருகிறேன்
இன்று இருக்காது அவைகள் எல்லாம்
என்ற எண்ணத்துடனேயே

நாம் நின்று பேசியபுங்கை மரமும்...
இருவர் சைக்கிளும் உறவாடிய நிறுத்துமிடமும்,
பிள்ளையார் கோயில் கருங்கல் மேஜையும்,
என் பெயர் கீறியஉன் வரிசை பெஞ்சும்...
உன் மணியான எழுத்தில்தேதி,கிழமை தாங்கியகரும்பலகையும்....
பிள்ளைகளுடன்பள்ளி செல்லும் இந்நாள்...

சாக்பீஸ் துகளால் கேசம் வெள்ளையாக்கிச்
சிரிக்கும் என் பிள்ளையும்...
என்னைப்போலவே
நந்தியாவட்டைபறித்து எறிந்து விளையாடும்
உன் மகளும்....

நலம் விசாரித்து மலர்ந்து விரிந்த
நம் கண்கள்பிரதிபலிக்கின்றன...
உன் குடும்பத்தின் மீதானஎன் வாத்சல்யம்...
என் வாழ்வின் மீதான உன் அக்கறை...
இந்த கணம் நாம் விட்டுச் சென்றஎல்லாமும்
அப்படியேஇருப்பதாய் உணர்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக