தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

எட்டிப்போ எச்சரிக்கிறேன்

எப்போதும்
உயர உயரப் பறக்க ஆசை
மகிழ்ச்சியும்,அன்பும்நிறைவும், அமைதியும்
ஊதிக் கட்டிய பலூனாய்...
இலக்கின்றி பறக்கின்றேன்...
இன்னும் மேலே...மேலே...
வாழ்க்கைக் காற்றும்
எனக்குச் சாதகமாய்...
சந்தோச அலையலோடு
இலக்கு நோக்கி பயணம்...
அகந்தைப் பறவை,
போகிற போக்கில்கூரிய அலகால்...
குத்தித் துளைக்க நானா கிடைத்தேன்...???
உனக்கான ஆள் நானில்லை
எட்டிப்போ எச்சரிக்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக