தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

உலகக்கருத்துகளுக்கு உதைபந்தாய் நான்

காப்பாற்று...
தொலைந்து போகிறது...
சட்டென்று படியிறங்கிமழை நனைவதோ,
சோறு வைக்க காக்காவை கத்தி அழைப்பதோ...,
நீர் சொட்டும் கூந்தலுடன்
மொட்டைமாடி புத்தகங்களோ...,
அலட்சியமான சைக்கிள் சவாரியோ...,
இவற்றிற்கான சாத்தியங்கள் மெல்லக்குறைய...
உலகின் கருத்துகளுக்கு
உதை பந்தாய் நான்...
கவிதையே காப்பாற்று...
என் குழந்தைமை
மெல்ல கூக்குரலிட்டுஅழுது மடிவது...
உன் காதில் கேட்கிறதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக