தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

நீயும் சுயம்புதான்

சுயம்புவாய் யான் மட்டும்...
நினைக்கும் போதே
மனதின் கர்வம்மண்டையில் அறைகிறது..
யாரிங்கு சுயம்பு...?
புதைந்து எழமண் மாதா...
எழுந்து நனைய மழை மாதா...
சுட்டு வடிக்கசூரியன் உதவி..
.உள்ளே திறக்ககாற்றுச் சாவி...
கூப்பி வணங்கமுடிவற்ற ஆகாயம்...
ஐவரும் எம்மைஅனுப்பி வந்த இடம்..
முளைத்தெழும் காலை
சுயம்புவென்றால்...சிரிக்கின்றன பூதங்கள்...
சிரிப்புக்கு பயந்துஉள்ளே ஒடுங்குகிறேன்...
அணைத்துச் சொல்கின்றன...
,உலகச் சுயம்பில் ஒரு துளி நீயென்றால்
நீயும் சுயம்புதான்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக