தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

நாடோடிகளின் சாவிக்கொத்து

அவ்வளவு தானா
ஒருசாவிக்கொத்தின் சரித்திரம்?
சாவிகளை எளிதில் தொலைப்பதே என் வழக்கம்...
முதல் நாள் பணியில்ஒற்றைச் சாவி ஒன்று கைக்கு வந்தது..
அலுவலக அலமாரிச்சாவி...
கைப்பையின் இண்டுகளில் அதுஒளிந்து விளையாடியதால்
பொம்மை சாவிக்கொத்து ஒன்றைப்
புதியாய் வாங்கிஇணைத்து வைத்தேன் சாவியை...
சாவிக்கொத்து பொம்மைமூக்கை தொட்டால் அழும்
காதைத்தொட்டால் சிரிக்கும்...
அந்த வாரம் வீட்டின்சாவியும், கொத்தில்...
அதற்கடுத்த மாதங்களில்
இன்னும் சில சாவிகளை இணைத்துக் கொண்டு
கொழுத்துப் பருத்ததுசாவிக்கொத்து...
இரண்டு வருடமாய் இதுவரை தொலையவில்லை...
ஒரு நாளும் எடுத்து வரநானும் மறந்ததில்லை...
போரடிக்கும் நேரங்களில்
பொம்மையுடன் பேசிக்கொண்டிருப்பேன்...
இன்று கடைசிநாள் வேலை...
இனி தேவைப்படாது சாவிக்கொத்து....
அரை டஜன் சாவிகள்...
கனமாய் கனக்கிறது கையில்...
என்ன செய்வது சாவிகளை?
நாடு விட்டு நாடு கொண்டு சென்றால்,

பூட்டைப் பிரிந்த சாவிகள் புலம்பாதா?
சாவிக்கொத்து பொம்மை
மூக்கைத் தொட்டவுடன் சத்தமாய் அழுகிறது
சாவிகளின் பிரிதலை எண்ணி...
எது என் மனதைத் தொட்டது...
மனதுக்குள் ஏன் அழுகிறேன் நான்?கனக்கிறது...
சாவிக்கொத்தும்...என் மனமும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக