தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

பாவம் தேவதைகள்

பறக்கும் தேவதைகள்
நடந்து பார்த்ததில்லை...
கால்பாவாத தேவதைபோல
வான் வெளி தாண்டியும்
அலையும் கவிதைகள்...
என்றேனும்,
ஒற்றை நட்சத்திரம் மட்டும்
ஒளிரும் ராத்திரியின் நிசப்சத்தில்
மொட்டைமாடி தரைக்குளுமை
முதுகுணரும் அந்த வேளை
தென்னைமர நிழல்
இருட்டின் நிறத்தில்
என் மீது கவிந்திருக்கும் கவின்பொழுது
விரித்து வைத்த என் கவிதைபடித்து விட்டு...
நின்று ஒருநிமிடம் பார்த்துவிட்டு
புன்னகை வீசிச்செல்லுமொரு தேவதை,
கண்ணில் ஆதங்கத்துடன்...
பாவம் தேவதைகள்...!!!
பறந்து கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக