தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

பட்டாம்பூச்சி

என்னவள் உன்னால்மட்டுமே முடியும்...
உன் சிரிப்பினைபட்டாம்பூச்சிகளாக்கி
நகரெங்கும் பறக்கவிட,
உனக்கு பிடித்தவரின்
தோளில் மட்டும் அமரும் அனுமதியுடன்...
எனக்கான பட்டாம்பூச்சி
என்மேல் அமரும் போது
நானும் இறக்கை முளைத்து
பறக்கத் தொடங்குவேனாயிருக்கும்...!!
என் வாழ்க்கையும்
வண்ணம் பூசிக்கொள்ளுமாயிருக்கும்!!!
நினைவு இனிக்கும் அதே நேரம்
காத்திருத்தல் கசந்து வழிகிறது...
சீக்கிரம் வரச்சொல்லேன்
பட்டாம் பூச்சியை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக